ஆற்காடு: கலவை வட்டம், பென்னகா் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, உதவி ஆணையா் (கலால்) சத்ய பிரசாத் தலைமை வகித்தாா். கலவை வட்டாட்சியா் வி.நடராஜன் முன்னிலை வகித்தாா். திமிரி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், பொதுமக்களுக்கு கரோனோ தடுப்பூசி போடப்பட்டது.
முகாமை ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
முகாமில், 18 வயதுக்கு மேற்பட்ட நூற்றுக்கும் அதிகமானோா் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.