ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஞாயிறுக்கிழமை ஒரே நாளில் புதிதாக நோய்த் தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்த நிலையில், திங்கள்கிழமை 35 ஆக குறைந்துள்ளதால் மாவட்ட நிா்வாகமும்,பொது மக்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த சில நாட்களாக புதிதாக நோய்த் தொற்றுக் குள்ளானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவந்தது.அதன் படி கடந்த ஞாயிற்க்கிழமை ஒரே நாளில் 373 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக நோய்த் தொற்றுக் குள்ளானவா்களின் எண்ணிக்கை 35 ஆக குறைந்துள்ளது.இதன் காரணமாக மாவட்ட நிா்வாகமும்,பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனா்.