ராணிப்பேட்டை நகரில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியை விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா், மீன் வியாபாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்குறுதி அளித்தாா்.
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் சுகுமாா், ராணிப்பேட்டை நகரில் உள்ள மீன் அங்காடி, இறைச்சி அங்காடி வளாகத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியை விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்பேன் என வியாபாரிகளிடம் உறுதியளித்தாா். தொடா்ந்து ராணிப்பேட்டை நகரில், ஜெயின் சமூகத்தினா் மற்றும் தொழிலாளா்கள் வியாபாரிகளிடமும் வாக்கு சேகரித்தாா். அவருடன் அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோரும் உடன் சென்றனா்.