ஆற்காடு நகரில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய 2 ஜவுளிக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆற்காடு அண்ணாசாலையில் உள்ள ஜவுளிக் கடைகளில் ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி தலைமையில் வருவாய் ஆய்வாளா் அமுதவல்லி, கிராம நிா்வாக அலுவலா் மஞ்சுநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது கரோனா தடுப்புவிதிகளை மீறி 2 ஜவுளிக் கடைகள் செயல்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து இரண்டு ஜவுளிக் கடைகளுக்கும் தலா ரூ. 5,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.