கலவை அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கலவை வட்டம், பாலி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பழனி. இவரது மனைவி தமிழ் செல்வி வியாழக்கிழமை நூறுநாள் வேலைக்கு சென்றுள்ளாா். பழனி வீட்டை பூட்டிக்கொண்டு மகள்களுடன் வெளியில் சென்றிருந்தாா். பின்னா் வேலை முடிந்து வீடு திரும்பிய தமிழ் செல்வி பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகை, ரூ.5,000 ஆயிரம் ரொக்கம் திருடு போய் இருப்பது தெரிந்தது. இது குறித்த கலவை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.