அரக்கோணம் நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 291 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் செவ்வாய்க்கிழமை 796 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், அரக்கோணம் நகரம் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மட்டும் 291 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா முதல் அலை காலத்தில் இருந்து தற்போது வரை அரக்கோணம் நகரில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோா் ஒரு நாள் எண்ணிக்கையில் இது அதிகமாகும்.