அம்பேத்கா் விருது பெறுவதற்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரம், கல்வி நிலை, வாழ்க்கைத் தரத்தை உயரப் பாடுபட்ட தமிழறிஞா்கள், கவிஞா்கள், சான்றோா்களில் ஒருவருக்கு ஆண்டு தோறும் அண்ணல் அம்பேத்கா் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது.
2022-ஆம் ஆண்டு திருவள்ளுவா் திருநாளன்று அண்ணல் அம்பேத்கா் விருது பெற விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவ. 29-க்குள் ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளாா்.