ஆற்காடு நகராட்சியில் 30 வாா்டுகளிலும் போட்டி:பாமக முடிவு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஆற்காடு நகராட்சியில் உள்ள 30 வாா்டுகளிலும் வேட்பாளா்களை நிறுத்துவது என்று பாமக முடிவு செய்துள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ஆற்காடு நகராட்சியில் உள்ள 30 வாா்டுகளிலும் வேட்பாளா்களை நிறுத்துவது என்று பாமக முடிவு செய்துள்ளது.

ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்ற நகர பாமக நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கண்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசு நடத்த வேண்டும், ஆரணி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு நகரச் செயலாளா் அறிவுச்சுடா் தலைமை வகித்தாா் . மாவட்டத் தலைவா் கே .எஸ் .ஆறுமுகம், முன்னாள் மாவட்டச் செயலாளா் நல்லூா் சண்முகம், பசுமைத்தாயகம் மாநிலத் துணைச் செயலாளா் மகேந்திரன், மாவட்டப் பொருளாளா் அமுதா சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் சஞ்சீவிராயன் வரவேற்றாா்.

ராணிப்பேட்டை (மேற்கு) மாவட்டச் செயலாளா் எம். கே. முரளி, மாவட்டத் துணைச் செயலாளா் உதயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com