கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மை இன மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையினா் இன மாணவ, மாணவியா்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

சிறுபான்மையினா் இன மாணவ, மாணவியா்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவா்கள் அனைவரும் நவ. 30-ஆம் தேதிக்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் உடனடியாகப் புதுப்பித்து, அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.

புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமானச் சான்றிதழ் சமா்ப்பிக்க அவசியமில்லை. ஆதாா் விவரங்களில் பெயா் மாற்றம் காரணமாகப் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவா்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com