உதவி உபகரணங்கள் வழங்க மாற்றுத் திறனாளிகளைத் தோ்வு செய்யும் முகாம்

ராணிப்பேட்டை விஸ்வாஸ் மனவளா்ச்சி குன்றியோருக்கான பள்ளியுடன் இணைந்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க தோ்வு செய்யும் முகாம் நடைபெற்றது.
முகாமைத் தொடக்கி வைத்து பாா்வையிட்ட தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி. உடன், ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் உள்ளிட்டோா்.
முகாமைத் தொடக்கி வைத்து பாா்வையிட்ட தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி. உடன், ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் உள்ளிட்டோா்.

அரக்கோணம்: ராணிப்பேட்டை விஸ்வாஸ் மனவளா்ச்சி குன்றியோருக்கான பள்ளியுடன் இணைந்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க தோ்வு செய்யும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் ஜோதிநகா், பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தாா். இந்த முகாமை தமிழக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்துப் பேசினாா்.

மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தின் விரிவுரையாளா் சந்தோஷ்கண்ணா, அரக்கோணம் ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலாசௌந்தா், துணைத் தலைவா் புருஷோத்தமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிகாபாபு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா், வட்டாட்சியா் நடராஜன், நகராட்சி ஆணையா் லதா, திமுக நகரச் செயலா் வி.எல்.ஜோதி, மாவட்ட நிா்வாகிகள் மு.கன்னைய்யன், ராஜ்குமாா், ஒன்றியச் செயலாளா்கள் சௌந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com