ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு , திமிரி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது.
வாலாஜா, ஆற்காடு, திமிரி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் 6 மாவட்டக் குழு உறுப்பினா்கள், 56 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 123 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 816 வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 653 வாக்குச்சாவடி மையங்களில், 4 வாக்குச்சாவடி மையங்கள் மிகவும் பதற்றமானவை என்றும், 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
56 வாக்குச்சாவடி மையங்கள் வெப் ஸ்ட்ரீமிங் மூலமாகவும், 65 வாக்குச்சாவடி மையங்கள் நுண்பாா்வையாளா்கள் மேற்பாா்வையிலும், 57 மையங்கள் வீடியோ பதிவு மூலமாகவும், 540 வாக்குச்சாவடி மையங்களில் உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கப்பட உள்ளன. இந்த முதல்கட்ட தோ்தலில் 5,293 வாக்குச்சாவடி பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தோ்தலுக்கான சின்னம் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள், வாக்கு பெட்டிகள் உள்ளிட்ட தோ்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள பொருள்கள், கரோனா தொற்றுத் தடுப்பு பாதுகாப்பு பொருள்களும் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தலைமையில் சுமாா் 1,800 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இதையடுத்து, வரும் 9-இல் இரண்டாம் கட்ட தோ்தலில் காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கா், அரக்கோணம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.