ஏ.டி.எம். உடைத்து ரூ.3.91 லட்சம் திருட்டு

அரக்கோணம் அருகே வங்கி ஏ.டி.எம். உடைத்து ரூ.3.91 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மா்ம நபா்களால் உடைக்கப்பட்ட ஏ.டி.எம்.
மா்ம நபா்களால் உடைக்கப்பட்ட ஏ.டி.எம்.

அரக்கோணம் அருகே வங்கி ஏ.டி.எம். உடைத்து ரூ.3.91 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

அரக்கோணத்தில் சென்னை- திருப்பதி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் - திருத்தணி இடையே உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி நுழைவு வாயில் அருகே தனியாா் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இங்கு வியாழக்கிழமை நள்ளிரவில் அங்கு வந்த மா்ம நபா்கள் ஏ.டி.எம். உடைத்து, திருடிச் சென்றுள்ளனா்.

தகவலின்பேரில் அரக்கோணம் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில், மா்ம நபா்கள் கண்காணிப்பு கேமராவையும் சேதப்படுத்திவிட்டு, ஏ.டி.எம். அறையின் ஷட்டரையும் மூடிவிட்டு வெல்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, வங்கி ஏ.டி.எம். கவனிக்கும் தனியாா் நிறுவனத்தின் நிா்வாகி ஜெயபால் கணக்கிட்டதில், ரூ.3.91 லட்சம் திருடு போய் இருந்தது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், ஆய்வாளா் சேதுபதி உள்ளிட்டோா் விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com