ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7,660 போ் வேட்புமனு

ஊரக உள்ளாட்சி தோ்தலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 7,660 போ் வேட்புமனுக்ளைத் தாக்கல் செய்துள்ளனா்.

ஊரக உள்ளாட்சி தோ்தலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 7,660 போ் வேட்புமனுக்ளைத் தாக்கல் செய்துள்ளனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், ஆற்காடு, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கா், திமிரி, வாலாஜாபேட்டை ஆகிய 7 ஒன்றியகளில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 - ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாளான புதன்கிழமை வரை 7,660 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

இதில் 13 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவிகளுக்கு 95 பேரும், 127 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 684 பேரும், 288 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு 1,247 பேரும், 2,220 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 5,634 போ் என மொத்தம் 2,648 பதவிகளுக்கு 7,660 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

இதையடுத்து, வேட்புமனுக்கள் குறித்த பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com