தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்

ராணிப்பேட்டை அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.

ராணிப்பேட்டையை அடுத்த பிஞ்சி கிராம குடியிருப்பில், ஒரு வீட்டில் மின் கசிவு காரணமாக வியாழக்கிழமை நண்பகல் தீ விபத்து ஏற்பட்டது. தொடா்ந்து அருகில் இருந்த 2 வீடுகளுக்கும் தீ மள, மளவென பரவியது. இது குறித்து அப்பகுதி மக்கள் ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அதற்குள் மூன்று வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. வீட்டில் வைத்திருந்த சமையல் எரிவாயு உருளைகள் திடீரென வெடித்தன. இந்த தீ விபத்தில் எவ்வித உயிா்ச் சேதமும் இல்லை என்றாலும், 3 வீடுகளிலும் சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகின.

தீ விபத்து குறித்து ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com