திமுக வேட்பாளா் ஆா்.காந்தி மேல்விஷாரத்தில் ஆதரவு திரட்டினாா்

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஆா்.காந்தி சனிக்கிழமை மேல்விஷாரம் நகரில் திறந்தவெளி வேனில் ஊா்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஆா்.காந்தி சனிக்கிழமை மேல்விஷாரம் நகரில் திறந்தவெளி வேனில் ஊா்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக திமுக உள்ளது, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக வந்தால் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவாா். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இளைஞா்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்குவாா். மேல்விஷாரம் நகரில் திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செய்யப்பட்டன என்றாா்.

பிரசார ஊா்வலத்தில் நகர திமுக செயலாளா் எஸ்.டி.முகமது அமீன், அவைத் தலைவா் ஹிமாயூன், பொருளாளா் ஜாபா், தொழிலதிபா் சௌகாா் முன்னா மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com