ராணிப்பேட்டை மாவட்டத்தில் 246 பேருக்கு நோய்த் தொற்று

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 246 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 246 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக அரக்கோணம் மற்றும் வாலாஜா வட்டத்தில் ஏராளமானோா் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று 2 - ஆம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 246 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17, 859 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 16,294 போ் குணமடைந்துள்ளனா். மேலும் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 1,371 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு 194 போ் வரை உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com