குண்டா் சட்டத்தில் இருவா் கைது

கொலை வழக்கு உள்ளிட்டவற்றில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

கொலை வழக்கு உள்ளிட்டவற்றில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

அரக்கோணம் கிராமிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த கொலையில் தொடா்புடைய அரக்கோணம் வட்டம், மேல் ஆவதம் கிராமத்தைச் சோ்ந்தவா் புஜ்ஜி (எ) முனிசாமி (23). இவரை ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் ஓா் ஆண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

அதேபோல் ரத்தினகிரி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சாம்பசிவபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்த மாணிக் பாட்ஷா (24) என்பவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

சிறையில் உள்ள இருவரிடமும் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com