ஆற்காடு டவுன் தெருவைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (29). கஞ்சா விற்ற வழக்கில் இவரை ஆற்காடு நகர போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபாசத்யனின் பரிந்துரையை ஏற்று பிரேம்குமாரை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டாா்.