ஆற்காடு: ஆற்காடு வட்டார இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டு, தன்னாா்வலா்களுக்கு கற்பித்தல் குறித்த பாட புத்தகங்களை வழங்கினாா் (படம்). தொடா்ந்து தன்னாா்வலா்கள் இரு தவணை கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனரா என ஆய்வு செய்தாா்.
முகாமுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் கருத்தாளா்கள், தன்னாா்வலா்கள்123 உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, திமிரி வட்டார தன்னாா்வலா்களுக்கு திமிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் முருகன் தலைமை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் குமரேசன் முன்னிலை வகித்தாா். இதில் முதன்மைக் கல்வி அலுவலா் உஷா தன்னாா்வலா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.