செயற்கைக் கோள் தொழில்நுட்பப் பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

செயற்கைக் கோள்கள் உருவாக்கும் தொழில்நுட்பப் பயிற்சியில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.
செயற்கைக் கோள் தொழில்நுட்பப் பயிற்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு


ராணிப்பேட்டை: செயற்கைக் கோள்கள் உருவாக்கும் தொழில்நுட்பப் பயிற்சியில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாணவா்களிடையே அறிவியல் ஆராய்ச்சியை வளா்க்கும் நோக்கில் டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சா்வதேச அறக்கட்டளை சிறிய ரக செயற்கைக் கோள்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை பயிற்சியாக வழங்கியது.

இச்செயற்கைக்கோள்கள் 50 கிராமுக்கும் எடை குறைவானவை. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற இப்பயிற்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 அரசுப் பள்ளிகளில் பயிலும் 34 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இந்த செயற்கைக்கோள்கள் டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த ஊரான ராமேசுவரத்தில் பிப்ரவரி 7- ஆம் தேதி ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூன் மூலம் வானில் செலுத்தப்பட்டது.

இப்பயிற்சியில் பங்குபெற்ற ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 34 மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com