அரக்கோணம்: அரக்கோணம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை மண்டலப் பயிற்சி மையத்தில் படையின் துணை கமாண்டண்ட் விக்ரம்சிங் உள்ளிட்ட 50 அலுவலா்கள் வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை மண்டலப் பயிற்சி முகாம் வளாகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் இரு நாள் சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. அரக்கோணம் வட்டார நடமாடும் மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் பொன்மணியன் தலைமையில் மருத்துவக் குழுவினா் தடுப்பூசியை செலுத்தினா்.
முதலாவதாக பயிற்சி மைய துணை கமாண்டண்ட் விக்ரம்சிங் ஊசியை தானே முன்வந்து செலுத்திக் கொண்டாா். அதைத் தொடா்ந்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள தானே முன் வந்த 50 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்த முகாம் வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது. அன்று 50 பேருக்கு தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்த மருத்துவா்கள், தொடா்ந்து அரசு உத்தரவை அடுத்து பின்வரும் நாள்களில் மேலும் முகாம்கள் பயிற்சி மையத்தில் நடத்தப்படும் என்றனா்.