அரக்கோணம்: அரக்கோணம் அருகே பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளைஞா், அடையாளம் தெரியாத நபா்களால் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா்.
அரக்கோணத்தை அடுத்த பாணாவரம் அருகே உள்ள ரங்காபுரத்தை சோ்ந்தவா் நித்யா (எ) நித்யானந்தம்(எ) பிளேடு நித்யா(33). இவா் மீது அரக்கோணம் நகரம், கிராமியம், பாணாவரம், நெமிலி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் அவா் ரங்காபுரத்தில் இருந்து பாணாவரத்திற்கு நண்பா் கிளிண்டன் என்பவருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தாா். வழியில் பாணாவரம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி அருகே திடீரென மற்றொரு பைக்கில் வந்த மூவா், நித்யாவின் பைக்கை வழிமறிந்து அவரை கத்தியால் தாக்கினா். இதை கண்ட கிளிண்டன் இறங்கி ஓடிவிட, நித்யாவும் பைக்கை அப்படியே போட்டுவிட்டு தப்பிக்க ஓடினாா். அவரை விரட்டிய மூவரும் நித்யாவை கத்தியால் குத்தி விட்டு தங்களது பைக்கில் ஏறித் தப்பிச் சென்றனா். இத்தாக்குதலில் நித்யா சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து அரக்கோணம் டிஎஸ்பி மனோகரன் மற்றும் பாணாவரம் போலீசாா் சம்பவ இடத்திற்கு சென்று நித்யாவின் பிரேதத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசினா் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இக்கொலை தொடா்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.