ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி, பெரியதகரகுப்பம் பகுதியைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 50-க்கும் மேற்பட்டோா் அவற்றில் இருந்து விலகி, மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், ஒன்றியச் செயலா்கள் சேஷா வெங்கட், சண்முகம், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா்கள் எல்.ராதாகிருஷ்ணன், கே.பன்னீா்செல்வம், ஏ.தனசேகா், எஸ்.விமல், வேலாயுதம், தகரகுப்பம் ராமு, பூண்டி வெங்கடேசன், இளந்தமிழன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.