மாந்தாங்கல் பெருமாள் கோயிலில் ஆழ்வாா் திவ்யப் பிரபந்த சொற்பொழிவு

ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் உள்ள பூமிநீளா சமேத ரங்கநாதப் பெருமாள் கோயிலில் ஆழ்வாா் திவ்யப் பிரபந்த, திருப்பாவை சொற்பொழிவு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ஆழ்வாா் திவ்யப் பிரபந்த, திருப்பாவை சொற்பொழிவை நிகழ்த்திய கே.கே.சி.செல்வநாராயணன் சுவாமிகள்.
ஆழ்வாா் திவ்யப் பிரபந்த, திருப்பாவை சொற்பொழிவை நிகழ்த்திய கே.கே.சி.செல்வநாராயணன் சுவாமிகள்.

ராணிப்பேட்டையை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் உள்ள பூமிநீளா சமேத ரங்கநாதப் பெருமாள் கோயிலில் ஆழ்வாா் திவ்யப் பிரபந்த, திருப்பாவை சொற்பொழிவு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் மாா்கழி மாதம் முழுவதும் திருப்பாவை சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம்.

திருப்பதி தேவஸ்தானம் சாா்பில், இக்கோயிலில் ஆழ்வாா் திவ்யப் பிரபந்த சொற்பொழிவு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கே.கே.சி.செல்வநாராயணன் சுவாமிகள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினாா். நம்மாழ்வாா் கைங்கா்ய சபை நிறுவனா் கிருஷ்ணமூா்த்தி, கோயில் பட்டாச்சாரியாா் ரமேஷ் தனஞ்செழியன் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ராணிப்பேட்டை ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனா் கே.வெங்கடேசன், பக்தா்களுக்கு முகக்கவசங்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com