வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உள்பட்ட சாலை, தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உள்பட்ட சாலைகள், தெருக்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து அதன் உரிமையளா்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மீறினால் மாடுகளைப் பிடித்து அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.