சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் எச்சரிக்கை

வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உள்பட்ட சாலை, தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும்

வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உள்பட்ட சாலை, தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உள்பட்ட சாலைகள், தெருக்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து அதன் உரிமையளா்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மீறினால் மாடுகளைப் பிடித்து அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com