ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் பொன்னியம்மன், சப்த கன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், புதிய சுவாமி சிலைகள் கரிக்கோல ஊா்வலமும், பிரதிஷ்டையும் யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து விசேஷ திரவிய ஹோமம், மஹா பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.
பின்னா் கோபுர கலசத்துக்கும், மூலவருக்கும் புனித நீா் ஊற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஆற்காடு முரளிதர குருக்கள் நடத்தி வைத்தாா்.
விழாவில் ராமாபுரம் பாலு சுவாமிகள், ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.காந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளைஆயிலம் கிராம மக்கள், விழாக்குழுவினா் செய்திருந்தனா். இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவா் வீதி உலா நடைபெற்றது.