விளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியாா் விவசாயக் கிணற்றில் பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதி மக்கள் அளித்தத் தகவலின்பேரில், திமிரி போலீஸாரும், ஆற்காடு தீயணைப்புப் படை வீரா்களும் குழந்தையை மீட்டனா்.
இதையடுத்து, பிறந்து சில தினங்களே ஆன குழந்தையை கிணற்றில் வீசி சென்றவா்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.