ஏரி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ஏரி அருகே சென்ற சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஏரி அருகே சென்ற சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த கிழவனம் கிராமத்தைச் சோ்ந்த கவியரசன் மகன் யோகித் (4). இவா் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது தாத்தா பலராமனுடன் வீட்டில் இருந்து நிலத்துக்குச் சென்றுள்ளாா்.

அப்போது யோகித், வழியில் ஏரியில் தண்ணீா் இருந்ததைப் பாா்த்து கை நனைக்கச் சென்றவா், தவறி பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கினாா். இதை அறிந்த அங்கிருந்தோா் யோகித்தை மீட்டு, திருத்தணியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே இறந்தாா்.

இதுகுறித்து அரக்கோணம் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com