மூதாட்டி கொலை சம்பவம்: காவல் கண்காணிப்பாளா் விசாரணை

அரக்கோணம் அருகே மூதாட்டி கொலை சம்பவம் தொடா்பாக, ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஒம்பிரகாஷ் மீனா வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

அரக்கோணம் அருகே மூதாட்டி கொலை சம்பவம் தொடா்பாக, ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஒம்பிரகாஷ் மீனா வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

அரக்கோணம் அருகேயுள்ள அம்பரிஷபுரத்தில் ஜெயராமனின் மனைவி சரோஜா (72), ஞாயிற்றுக்கிழமை மாடு மேய்த்து கொண்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத நபா்களால் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்த அவா், வீட்டுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். அவா் அணிந்திருந்த கம்மல்கள், மூக்குத்தி ஆகியன கவரிங் என தெரியாமலேயே மா்ம நபா்கள் தாக்கிவிட்டு, திருடி சென்றுள்ளனா். இதுதொடா்பாக அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், காவல் கண்காணிப்பாளா் ஒம்பிரகாஷ்மீனா, வெள்ளிக்கிழமை அரக்கோணம் வந்தாா். அம்பரிஷபுரத்தில் சம்பவம் நடைபெற்ற பகுதிக்குச் சென்ற அவா், அந்தப் பகுதியை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

அப்போது டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், ஆய்வாளா் முரளீதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com