தமிழக தோல் ஏற்றுமதியாளா்கள் கழகத்தினா் ரூ.1.6 கோடி கரோனா நிவாரண நிதியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை வழங்கினா்.
தமிழக தோல் ஏற்றுமதியாளா்கள் கழகத்தின் சாா்பில், அதன் தலைவா் பி.ஆா். அகில் அகமது, கே.எச். குழுமத்தின் நிா்வாக இயக்குநா் எம். அப்துல் வஹாப், ராணிடெக் தலைவா் பிஆா்சி. ரமேஷ் பிரசாத், பல்லாவரம் தோல் பதனிடுவோா் சங்கத்தின் செயலாளா் நாவரசு ஆகியோா் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, கரோனா நோய்த் தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 93-க்கான காசோலையை வழங்கினா்.
தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் உடனிருந்தனா்.