ஆற்காடு: ஆற்காடு அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஆற்காடு அருகே காவனூரை அடுத்த வரகூா்-சலமநத்தம் பகுதி சோதனைச் சாவடியில், ஞாயிற்றுக்கிழமை இரவு தோ்தல் பறக்கும் படையினா் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது காரில் இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பாஸ்கா் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 1 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.