ஆற்காட்டில்...
ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நிலைக் குழுவினா் வேளாண்மைத் துறை அலுவலா் டேவிட் சாமுவேல் தலைமையில், ஆற்காடு -ஆரணி சாலையில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரி அருகே வியாழக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் இருந்த நபா்களிடம் ஆவணம் ஏதுமின்றி இருந்த ரூ. 1 லட்சத்து 69 ஆயிரம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.