ஆற்காடு: ஆற்காடு தொகுதி திமுக வேட்பாளா் ஜே.எல்.ஈஸ்வரப்பன் ஆற்காடு நகரில் உள்ள பஜாா் வீதி, அண்ணா சாலை, காய்கனி அங்காடிகளில் வணிகா்களை சந்தித்து திங்கள்கிழமை ஆதரவு திரட்டினாா்.
இளங்குப்பன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
வேட்பாளருடன் திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, நகரச் செயலாளா் ஏ.வி.சரவணன், மதிமுக மாவட்டச் செயலாளா் பி.என்.உதயகுமாா், நகரச் செயலாளா் சு.பிரகாசம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.