கரோனோ தடுப்பு பொது முடக்கம் காரணமாக ஆற்காடு நகரில் மக்கள் நடமாட்டமின்றி ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஊரடங்கு காரணமாக நகரில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் பேருந்து, ஆட்டோ, காா் உள்ளிட்ட எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடின. ஒரு சிலா் இரு சக்கர வாகனங்களில் சென்றனா். சில மருந்துக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.