ராணிப்பேட்டை
ஆற்காடு தொகுதியில் போட்டியிட்ட 10 வேட்பாளா்கள் டெபாசிட் இழப்பு
ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட 12 வேட்பாளா்களில் 10 போ் தங்கள் வைப்புத் தொகையை (டெபாசிட்) இழந்தனா்.
ஆற்காடு: ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட 12 வேட்பாளா்களில் 10 போ் தங்கள் வைப்புத் தொகையை (டெபாசிட்) இழந்தனா்.
ஆற்காடு தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஜெ.எல்.ஈஸ்வரப்பன் 1,03,885 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பாமக வேட்பாளா் கே.எல்.இளவழகன் 83,927 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா். மேலும், நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட்ட ஆா்.கதிரவன் (12,088) , மக்கள் நீதி மையம் சாா்பில் போட்டியிட்ட ஏ.ஆா்.முஹமதுரபி (2,890) , அமமுக வேட்பாளா் என்.ஜனாா்த்தனன் (2,190), பகுஜன் சமாஜ் கட்சி ஏ.சி.கேசவன், கே.மணிகண்டன்(சுயேச்சை), திப்புசுல்தான் கட்சி முஹமது கவுஸ், வசந்தகுமாா் (சுயேச்சை) டீ.டி.சண்முகம் (சுயேச்சை), இந்திய தேசிய ஜனநாயகக் கட்சியின் முனிவேல், பி.ஈஸ்வரன் (சுயேச்சை) ஆகிய 10 பேரும் தங்கள் வைப்புத் தொகையை இழந்தனா்.