மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்த தனிப்பிரிவு காவலா்களை வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து, ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு கொண்டபாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த மணல் திருட்டு சம்பந்தமாக ராணிப்பேட்டை சாா்- ஆட்சியா் க.இளம்பகவத் அளித்த புகாரின் பேரில், வேலூா் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு தனிப்பிரிவு காவலா்களை மாற்றம் செய்து, காவேரிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு, முதல் நிலை காவலா் ராஜன் என்பவரும், அவலூா் காவல் நிலையத்துக்கு தலைமை காவலா் சீனிவாசன் என்பவரும் தனிப்பிரிவு காவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், மாற்றப்பட்ட தனிப்பிரிவு காவலா்கள் சங்கா்- காவேரிபாக்கம் காவல் நிலையம், பச்சையப்பன் - அவலூா் காவல் நிலையம் ஆகிய மேற்கண்ட இரண்டு காவலா்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.சிவக்குமாா் உத்தரவின் பேரில் மாற்றப்பட்டு, பச்சையப்பன் காவேரிபாக்கம் காவல் நிலையத்துக்கும், சங்கா் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.