‘கிராமங்களில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு அவசியம்’

கிராமங்களில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என தமிழக ஊரக வளா்ச்சித் துறை மாநில இயக்குநா் பழனிசாமி தெரிவித்தாா்.
அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூா் கிராமத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கிய மாநில ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பழனிசாமி.
அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூா் கிராமத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கிய மாநில ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பழனிசாமி.

அரக்கோணம்: கிராமங்களில் கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என தமிழக ஊரக வளா்ச்சித் துறை மாநில இயக்குநா் பழனிசாமி தெரிவித்தாா்.

தமிழக ஊரக வளா்ச்சித் துறை மாநில இயக்குநா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை கரோனா விழிப்புணா்வுப் பணிகள் மற்றும் கரோனா சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்ய ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். காவேரிபாக்கம் வட்டாரத்தில் ஒச்சேரியில் உள்ள சப்தகிரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, தருமநீதி கிராமத்திலும் மேலும் நெமிலி வட்டாரம் மேலப்புலம் கிராமத்திலும் கரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டாா்.

இதையடுத்து, அரக்கோணம் வட்டாரம், இச்சிபுத்தூா் கிராமத்துக்கு வந்த அவா், அங்கு கரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து கரோனா தடுப்பு விழிப்புணா்வுக் குழுவினரிடம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். பின்னா் அவா் கூறுகையில், ‘கிராமங்களில் கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம், தடுப்பூசி குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்த வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com