ரத்தினகிரி ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
யாக சாலை பூஜையுடன் தொடங்கிய இவ்விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. நாள்தோறும் காலை, மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், உற்சவா் பிராகாரமும் நடைபெறும்.
இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை வெள்ளிக் கவசத்துடன் மயில்மேல் முருகன் கோலத்தில் மூலவா் காட்சியளித்தாா். முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 9-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. 10-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ஸ்ரீபாலமுருகனடிமை சுவாமிகள், நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.