வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகளைத் தவிா்க்க வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும்போது வேட்பாளா்கள் அல்லது முகவா்களை உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாமகவினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்துள்ளனா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில், இந்தக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.