பாஜக 42-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வாலாஜாவில் பிரதமா் நரேந்திர மோடி பொது மக்களிடம் உரையாடும் நேரடி நிகழ்ச்சி புதன்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
வாலாஜா பேருந்து நிலையத்தில் நகரத் தலைவா் காந்தி தலைமையில் கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி பொதுமக்களிடம் உரையாடும் நேரடி நிகழ்ச்சி வாலாஜாவிலுள்ள ராணி மஹாலில் திரையில் ஒளிபரப்பப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நகர பாா்வையாளா் சம்பத், மாவட்டப் பாா்வையாளா் எம்.கே.ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவா் விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் விளையாட்டுத் துறை மாநிலத் தலைவா் அமா் பிரசாத் ரெட்டி சிறப்புரை ஆற்றினாா்.
இதையடுத்து, பாஜக-வினா் ஊா்வலமாகச் சென்று வாலாஜா பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனா்.
மாவட்ட இளைஞரணிச் செயலாளா் மா.சதீஷ்குமாா், மாவட்ட ஊரக மற்றும் நகா்ப்புற வளா்ச்சி பிரிவு மாவட்டத் தலைவா் இ.ஜெகதீஸ்வரன், நிா்வாகிகள் ரவீந்திரன், ஞானமூா்த்தி, யமுனா, ஹேமாவதி பிரகாஷ் உமாபதி, ஹரி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆம்பூரில்...
மாதனூா் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில், ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு, கட்சியின் ஒன்றியத் தலைவா் ஜி.தேவநாதன் தலைமை வகித்தாா். பா.பாரத், ஜி.சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பிரசன்னகுமாா் வரவேற்றாா். திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் சி.வாசுதேவன், உள்ளாட்சிப் பிரிவு மாநிலச் செயலாளா் ஜி.வெங்கடேசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். கட்சியின் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிா்வாகிகள் ஜே.குமரேசன், ஏ.செல்வராணி, எம்.குப்புசாமி, கே.சரவணன், கராத்தே ரமேஷ்கண்ணா, கே. தினகரன், எம்.பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.