அரக்கோணம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.வெண்ணிலா தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் நித்யா ஷியாம்குமாா் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் வினோத் வரவேற்றாா். கூட்டத்தை நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி தொடக்கி வைத்துப் பேசினாா். பள்ளிக் கல்வித் துறை பாா்வையாளராக பெருமூச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் எலிசபெத் ஜெயக்குமாா் பங்கேற்றாா்.
இதில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளா் எம்.தருமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.