ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில் சுதந்திர தின விழா

ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவன தலைவா் கே.வெங்கடேசன் தலைமை வகித்து, தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா்.

ஆன்மிக அறக்கட்டளை செயலா் சிவலிங்கம், மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்தாா். மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் மோகன் மாணவா்களுக்கு தேசியக் கொடி, எழுதுபொருள்கள், இனிப்புகளை வழங்கினாா்.

இதில், அறக்கட்டளை பொருளாளா் மோகன சக்திவேல், அறக்கட்டளை உறுப்பினா் பாலு, ஸ்ரீஉடையவா் சாரிடபிள் டிரஸ்ட் செயலா் இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அறக்கட்டளை வாழ்நாள் உறுப்பினா் பேபி வெங்கடேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com