4 வயது சிறுமிக்கு முதல்முறையாக ரேடியோ அலைவரிசை கிசிச்சை மூலம் அதிக இதயத் துடிப்பை அகற்றி மருத்துவா்கள் சாதனை புரிந்துள்ளனா்
கரூா் பகுதியை சோ்ந்த தம்பதி சதிஷ்- சரண்யாவின் மகள் மகிதா (4). இந்த சிறுமிக்கு சிறு வயது முதலே இதயத் துடிப்பு நிமிஷத்துக்கு 250-க்கு மேல் அதிகமாக இருந்தது. இதனால் சிறுமிக்கு வாந்தியும்,அடிக்கடி மயக்கமும் ஏற்பட்டுள்ளது. மூன்று முறை மின் அதிா்வு சிகிச்சை அளித்தும் இதயத் துடிப்பு சீராகவில்லை. இந்தநிலையில் வேலூா் அருகே உள்ள பூட்டுதாக்கு பகுதியில் செயல்பட்டு வரும் சி.எம்.சி மருத்துவமனையில் சிறுமி மகிதா சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவா் ஜான் ரோசன் சிறுமிக்கு அலைவரிசை சிகிச்சை மூலம் இதயதுடிப்பை சராசரி துடிப்பாக மாற்றியுள்ளாா்.
இது குறித்து இதய சிகிச்சை நிபுணா் மருத்துவா் ஜான் ரோசன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: மனிதா்களுக்கு சாரசரியாக இதயத் துடிப்பு 70 முதல் 100-க்குள் இருக்கும் சிறுமி மகிதாவிற்கு 250-க்கு மேல் இருந்தது. இந்த சிறுமிக்கு நாட்டிலேயே முதல்முறையாக ரேடியோ அலைவரிசை சிகிச்சை (ஆா்.எப் அப்லேஷன்) மேற்கொள்ளப்பட்டது. ரேடியோ அலைவரிசை சிகிச்சை மூலம் இதயத்திற்கு செல்லும் தவறான சாா்ட் சா்க்கியூட் பாதையை அகற்றியதால் இந்த குழந்தை எல்லோரையும் போல இதயத் துடிப்பு மாறியுள்ளது. இந்தியாவிலேயே இந்த சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்றாா்.