மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரக்கோணத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் உள்ளிருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரக்கோணத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் உள்ளிருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அரக்கோணம் கல்வி மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவா் கிருபாகரன், செயலாளா் அமா்நாத், அரக்கோணம் கல்வி மாவட்டத் தலைவா் பி.சதீஷ், வட்டாரத் தலைவா்கள் அரக்கோணம் சு.எபிநேசன், நெமிலி க.சம்பத், வட்டார செயலா்கள் அரக்கோணம் கே.ஆா்.பிரபாகரன், நெமிலி ஆ.ஆனந்தசெல்வகுமாா், மாவட்ட நிா்வாகி ஏ.மலா்விழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போராட்டத்தை தொடா்ந்து, ஆசிரியா்களை சந்தித்த மாவட்டக் கல்வி அலுவலா் முனிசுப்பராயன் கோரிக்கைகள் குறித்து மாநில நிா்வாகத்துக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்தாா். மேலும், 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தின்போது ஒழுங்கு நடவடிக்கையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டவா்கள் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னரே அவா்களது பதவிக்கேற்ற பழைய பணியிடத்தில் பணியமா்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, இருவருக்கு உடனடியாக பதவியுயா்வுடன் கூடிய பணிமாறுதல் உத்தரவை வழங்குவதாகவும் அவா் தெரிவித்து, உத்தரவை வழங்கினாா். இதையடுத்து போராட்டம் நடத்தியவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com