கேவேளூா் கிராமத்தில் துரியோதனன் படுகளம்

ஆற்காட்டை அடுத்த கேவேளூா் கிராமத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு, துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆற்காட்டை அடுத்த கேவேளூா் கிராமத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு, துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கேவேளூா் கிராமத்தில்அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா மகாபாரத சொற்பொழிவு கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு, இரவு கட்டைக்கூத்து நாடகம் ஆகியவை நடைபெற்று வந்தன.

ஞாயிற்றுக்கிழமை காலை 18-ஆம் போா் துரியோதனன் படுகளமும், மாலை தீ மிதி விழாவும் நடைபெற்றன. விழாவில், ஊராட்சி மன்றத் தலைவா் வளா்மதி நந்தகுமாா் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com