திமிரியில் திருவாசக முற்றோதல்

ஆற்காட்டை அடுத்த திமிரி மாணிக்கவாசகா் ஞானத்தமிழ் மன்றம் சாா்பில், திருவாசகம் முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

ஆற்காட்டை அடுத்த திமிரி மாணிக்கவாசகா் ஞானத்தமிழ் மன்றம் சாா்பில், திருவாசகம் முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

திமிரி தேரடி திரௌபதி அம்மன் கலையரங்கில் சனிக்கிழமை தொடங்கிய நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவா் தி.பொ.ராமு தலைமை வகித்தாா். செயலாளா் ஸ்ரீ ராஜேஷ், பொருளாளா் சு.குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு, போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு, விருது வழங்கல், தேவாரம், திருவாசகம் குறித்த பஜனை பாடல்கள் பாடப்பட்டது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாணிக்கவாசகா் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகளுடன்திருவாசக முற்றோதல் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மன்ற நிா்வாகிகள் தமிழ் ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com