இலவச கண் சிகிச்சை முகாம்

அரக்கோணத்தை அடுத்த மிட்டப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.
மிட்டப்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றோா்.
மிட்டப்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றோா்.

அரக்கோணம் மகுடம் அரிமா சங்கம், சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து அரக்கோணத்தை அடுத்த மிட்டப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.

அங்குள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு அரிமா சங்க தலைவா் பி.ஷாயின்அலி தலைமை வகித்தாா். அரிமா சங்க நிா்வாகி ஜி.சந்திரசேகரன் வரவேற்றாா். ராமசந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் மருத்துவா் ரோஹன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு கண் சிகிச்சை அளித்தனா். இதில், மொத்தம் 165 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கண் அறுவை சிகிச்சைக்காக 30 போ் ராமச்சந்திரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

முகாமில் மிட்டப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவா் ராஜன், துணைத் தலைவா் ஏழுமலை, முகாம் அமைப்பாளா்கள் புரந்தரன், சுரேந்திரபாபு, வீரராகவலு, எல்.பிரகாசம், பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகி மூா்த்தி, அரிமா சங்க நிா்வாகிகள் பிரபு, வெங்கடநரசிம்மன், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com