ஆற்காடு நகா்மன்றக் கூட்டம்

ஆற்காடு நகா்மன்ற சாதாரணக் கூட்டம் நகா்மன்ற அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு நகா்மன்ற சாதாரணக் கூட்டம் நகா்மன்ற அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பவளக்கொடி சரவணன், ஆணையா் ப.சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நகரில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு மின் விளக்குகள் பொருத்த வேண்டும், நகரில் உள்ள பூங்காக்களை புதுப்பொலிவுடன் சீரமைக்க வேண்டும், தலைவா் மேற்பாா்வையில் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், ஆக்கிரமிப்பில் உள்ள பூங்காவை மீட்க வேண்டும், கட்டட அனுமதி பெறாமல் புதிய கட்டடங்கள் கட்ட அனுமதிக் கூடாது என்பன உள்ளிட்ட பல கோரிக்கைளை உறுப்பினா்கள் வலியுறுத்தினாா்கள்.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் பொன்ராஜசேகா், விஜயகுமாா், ஆனந்தன், லோகேஷ், முனவா்பாஷா கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com