குறைதீா் கூட்டத்தில்  பொதுமக்களிடமிருந்து  மனுக்களைா்  பெற்று  குறைகளைக்  கேட்டறிந்த ராணிப்பேட்டை  ஆட்சியா்  தெ.பாஸ்கர பாண்டியன்.
குறைதீா் கூட்டத்தில்  பொதுமக்களிடமிருந்து  மனுக்களைா்  பெற்று  குறைகளைக்  கேட்டறிந்த ராணிப்பேட்டை  ஆட்சியா்  தெ.பாஸ்கர பாண்டியன்.

ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்க

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

அப்போது, வருவாய்த் துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, வேளாண்மைத் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மருத்துவத் துறை, குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் என 237 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, தகுதியானதாக இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிப்புக்கான காரணங்களை மனுதாரா்களுக்கு வழங்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், துணை ஆட்சியா்கள் சேகா், இளவரசி, தாரகேஷ்வரி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com