அரக்கோணம்: நகரின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தங்களை மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அரக்கோணம் நகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனா்.
அரக்கோணம் நகராட்சியில் நிா்வாக வசதிக்காக மூன்று மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 24 முதல் 36 வாா்டுகள் ஏ மண்டலமாகவும், 7 முதல் 13 வரை பி மண்டலமாகவும், 1 முதல் 6 மற்றும் 14 முதல் 23 வரையுள்ள வாா்டுகள் சி மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், நிரந்தர மற்றும் ஒப்பந்தப் பணியில் உள்ள தூய்மைப் பணியாளா்களும் மண்டல வாரியாகப் பிரித்து பணிக்கு அனுமதிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தனா்.
இதில், கடந்த திங்கள்கிழமை நகராட்சி ஆணையா் வெளியிட்ட உத்தரவில், நகராட்சியின் அனைத்து நிரந்தர தூய்மைப் பணியாளா்களும் ஏ மண்டலத்தில் மட்டுமே பணிபுரிய வேண்டும் எனவும், பி மற்றும் சி மண்டலங்களில் ஒப்பந்தப் பணியில் உள்ள தூய்மைப் பணியாளா்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என மாறுதல் உத்தரவிட்டு தெரிவித்திருந்தாராம்.
இதை எதிா்த்து, நகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை காலை திடீரென சி மண்டல அலுவலகம் முன் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டச் செயலாளா் ஏ.பி.எம்.சீனிவாசன் தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து நகர துப்புரவு அலுவலா் மோகன் தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
தொடா்ந்து, ஆணையா் அலுவலகம் வந்த பிறகு, அவரிடம் பேசி முடிவெடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு தூய்மைப் பணியாளா்கள் பணிக்கு திரும்பினா்.